Thursday, May 2, 2019

வாழ்த்து!

ஆர்.தங்கையா

கில் நகர் பூங்காவுக்கு வரும் நண்பர்கள் சிலரைத் தேர்வு செய்து அவர்களின் வரலாறு குறித்த பதிவாக இந்த சிகரம் தொட்டவர்கள் என்கிற நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் அருமை நண்பர் பாலன். அவரின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன்.

நண்பர்களின் வாழ்க்கை வரலாறுகளை ரசிக்கத்தக்க முறையில் சுருக்கித் தந்திருப்பது அவரது உழைப்புக்கோர் சான்று. ஒவ்வொரு பக்கத்தையும் வியப்போடு வாசிக்க வைத்திருக்கிறார். பாலனின் எழுத்து நடை படிக்க ஆர்வத்தைத் தூண்டியது. 

நண்பர் சுடலைமுத்து பாண்டியன் அவர்களைப் பற்றி வாசிக்கிற போது அவரைப் பற்றி பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல தோழர் நடராசன், கிருஷ்ணன், அமல்ராஜ், முருகன், வெங்கடாசலம், பிரேம்குமார், ராஜன் பாபு, அல்போன்ஸ் என அனைவரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த நூல் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது, தன்னம்பிக்கையைத் தூண்டும் விதத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. .

கட்டுரைகளுடன் நண்பர்களின் அரிய புகைப்படங்கள் உள்ளத்தைத் தொடும் விதமாக  அமைந்திருக்கின்றன. நண்பர்களின் குடும்பத்தினர் அனைவரும் இந்த நூலை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என விரும்புகிறேன்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அன்புடன்
ஆர்.தங்கையா

No comments:

Post a Comment